முன்னாள் முதல்வர் மகன் மர்ம மரணம்: மனைவியே கொலை செய்தாரா?

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் என்பவரை அவரது மனைவியே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் கடந்த 16ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் ரோஹித்தின் மனைவி அபூர்வாவை விசாரணை செய்தபோது ரோஹித்தும், அபூர்வாவும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை போட்டுவந்ததாகவும் தெரிய வந்தது. மேலும் அபூர்வாவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும், அபூர்வாவின் குடுபத்தினர் தங்கள் சொத்தை அபகரிக்க திட்டமிட்டதாகவும் ரோஹித்தின் தாயார் விசாரணையில் கூறியுள்ளார்.

இதனையடுத்து அபூர்வாவிடம் தொடர்ச்சியாக 10 மணி நேரம் மீண்டும் விசாரணை செய்த போலீசார் பின்னர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யா 39 படத்தில் இணையும் 'விஸ்வாசம்' டெக்னிக்கல் டீம்!

சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ரஜினி, அஜித், விஜய் பட பிரபலம்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம்  வெளியாகவுள்ளது.

விமான நிலையத்தில் வாய்ப்பு கேட்ட ஹீரோயின்! கதாநாயகியாக மாற்றிய ராஜமௌலி!

இயக்குனர் ராஜமவுலியை, விமான நிலையத்தில் சந்தித்த போது வாய்ப்பு கேட்டதாக நடிகை ஆலியாபட் தெரிவித்துள்ளார்...

பிரபல காமெடி நடிகர் வீட்டில் கைவரிசை: 41 சவரன் நகைகள் கொள்ளை

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் இமான் அண்ணாச்சி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்லுங்கய்யா சொல்லுங்க'

'ஜாம்பி'யில் யோகிபாபுவுக்கு ஜோடியா யாஷிகா?

காமெடி நடிகர் யோகிபாபு, 'ஜாம்பி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அவருடன் கவர்ச்சி நடிகை யாஷிகா நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.