close
Choose your channels

ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமா? 17வயது சிறுமியை அடித்தே கொன்ற கொடூரத் தாத்தா!

Friday, July 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை ஜீன்ஸ் அணிந்த குற்றத்திற்காக குடும்ப உறுப்பினர்களே அடித்துக் கொலை செய்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த சிறுமியின் உடலை ஒரு பாலத்தில் இருந்து வீசி இருக்கின்றனர்.

கூட்டுக் குடும்பத்தில் வசித்துவந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த திங்கள் கிழமை தன்னுடைய விரதத்தை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு ஜீன்ஸ் மற்றும் ஒரு டாப்பை பூஜைக்காக அணிந்து சென்றிருக்கிறார். இதைப் பார்த்த அந்தச் சிறுமியின் தாத்தா உன்னுடைய உடை சரியில்லை என மிரட்டியிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த அந்த சிறுமி எனக்கு பிடித்து இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடை தாத்தா மற்றும் அங்கிருந்த மற்ற உறவினர்கள் 2 பேர் சேர்ந்து அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியின் உடலை ஒரு பாலத்தில் இருந்து வீசி இருக்கின்றனர். கடந்த திங்கள் கிழமை மாலை வீசப்பட்ட சிறுமியின் உடலானது செவ்வாய்கிழமை இரவுவரை அதே பாலத்தில் பல மணிநேரமாகத் தொங்கி இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

மேலும் சிறுமியை அவருடைய தாத்தா மற்றும் உறவினர்கள் 2 பேர் சேர்ந்து அடித்துக் கொன்ற விவகாரத்தை சிறுமியின் தாய் விசாரணையில் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தை அடுத்து ஒரு உடைக்காக ஒரு உயிரையே பலி வாங்குவதா எனப் பலரும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.