கொரோனா அவசர எண்ணை அழைத்து சமோசா கேட்ட வாலிபரை 'கவனித்த' கலெக்டர்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நகரங்களில் 24 மணிநேர அவசர உதவிக்கான இலவச உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பலர் கொரோனா குறித்த சந்தேகங்களை கேட்டு உதவி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அவசர எண்ணை தவறாக பயன்படுத்திய வாலிபர் ஒருவருக்கு நூதன தண்டனையை கலெக்டர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் செயல்பட்டுவரும் அவசர உதவி எண்ணை இளைஞர் ஒருவர் அடிக்கடி தொடர் கொண்டு 4 சமோசாக்களை தனது வீட்டுக்கு அனுப்பும்படி கூறியுள்ளார். முதலில் அவரை போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் அந்த நபர் மீண்டும் மீண்டும் 4 சமோசாக்களை தனது வீட்டுக்கு அனுப்பும்படி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ராம்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக அந்த நபரின் வீட்டுக்கு 4 சமோசாக்களை அனுப்ப உத்தரவிட்டது மட்டுமின்றி பொதுசேவையை தவறாக பயன்படுத்தியதாக அவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நூதன தண்டனையை அளித்துள்ளார். 4 சமோசாவுக்கு ஆசைப்பட்டு கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த அந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

டெல்லியில் இருந்து கோவை திரும்பிய 82 பேருக்கு கொரோனா அறிகுறியா? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் அந்த மாநாட்டிற்குப் பின்னர் தமிழகம் திரும்பிய பெரும்பாலானோருக்கு

மீண்டுவருவோம்; நம்பிக்கையளிக்கும் விதத்தில் “கோவிட்” எனப் பெயர்சூட்டப்பட்ட புலிக்குட்டி

மெக்ஸிகோவின் கோர்டபா நகரில் உள்ள ஒரு தனியார் மிருககாட்சி சாலையில் புதிதாகப் பிறந்த புலிக்குட்டிக்கு “கோவிட்” எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 74 ஆனது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் டெல்லி மாநாடு??? நடந்தது என்ன???

டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கடைகளில் வாங்கும் காய்கறி, பழங்கள் மூலம் கொரோனா பரவுமா? அதிர்ச்சி தகவல்

கடைகளில் வாங்கும் காய்கரி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களிலும் கொரோனா வைரஸ் இருக்குமா என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க உணவுப்பொருள் வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்