close
Choose your channels

புரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி!

Wednesday, November 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தில் நடிகர் சூரி 50 புரோட்டா சாப்பிடுவதாக பந்தயம் கட்டும் ஒரு காமெடி காட்சி இடம் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதே பாணியில் 50 முட்டைகள் சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய 42 வயது நபர் ஒருவர் 41வது முட்டை சாப்பிடும் போதே பரிதாபமாக பலியானார்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ். இவர் தன்னுடைய நண்பருடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது இருவரும் முட்டை சாப்பிடும் போது அவர்களுக்குள் திடீரென விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது உன்னால் 50 முட்டை சாப்பிட முடியுமா? என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட சுபாஷ், 50 சாப்பிட்டால் 2000 ரூபாய் தருவாயா? என்று கேட்டதற்கு அதற்கு அவருடைய நண்பரும் ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து 50 மூட்டை தயாரானது. ஒவ்வொரு முட்டையாக சாப்பிட்டுக் கொண்டு வந்த சுபாஷ், 41வது முட்டை சாப்பிடும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியபோது, முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அவை உணவுக் குழாயை அடைத்துக்கொள்ளும் என்றும் இதனால் சுவாசம் தடை படும் என்றும் இதனால் தான் சுபாஷ் மரணம் நிகழ்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து யாரும் எந்த புகாரும் கொடுக்காததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.