close
Choose your channels

ஜீன்ஸ் பேண்டிற்குள் புகுந்த பாம்பு: 7 மணி நேரம் நின்று கொண்டே இருந்த வாலிபரால் பரபரப்பு

Sunday, August 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாலிபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதால் அந்த வாலிபர் பாம்பு வெளியே வரும் வரை ஏழு மணி நேரம் நின்று கொண்டே இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மின்சார வாரிய தொழிலாளர்கள் அங்கு உள்ள ஒரு கிராமத்தில் மின்வாரிய பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்த அங்கன்வாடி பள்ளியில் அவர்கள் தூங்குவது வழக்கம். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மின்வாரிய தொழிலாளர்கள் அங்கன்வாடி பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தபோது லவ்வேஷ் என்ற வாலிபரின் ஜீன்ஸ் பேண்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது

ஜீன்ஸ் பேண்டிற்குள் ஏதோ ஊர்வது போல உணர்ந்த தொழிலாளி ஜீன்ஸ்க்குள் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் தனது சக தொழிலாளர்களிடமும் இது குறித்து கூறினார். எங்கே அசைந்தால் பாம்பு கடித்து விடுமோ என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்த தூண் ஒன்றை பற்றிப் பிடித்தவாறு அசையாமல் நின்று கொண்டிருந்தார்

இது குறித்து தகவல் பாம்பு பிடிப்பவர்களுக்கு அனுப்பப்பட்டு பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு வந்து, சில மணி நேரம் போராடி அவருடைய ஜீன்ஸ் பேண்டை கிழித்து அந்தப் பாம்பை வெளியே வரவழைத்தார். பாம்பை வெளியே எடுக்கும் வரை சுமார் 7 மணி நேரம் அந்த வாலிபர் தூணைப்பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.