ஜீன்ஸ் பேண்டிற்குள் புகுந்த பாம்பு: 7 மணி நேரம் நின்று கொண்டே இருந்த வாலிபரால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

வாலிபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதால் அந்த வாலிபர் பாம்பு வெளியே வரும் வரை ஏழு மணி நேரம் நின்று கொண்டே இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மின்சார வாரிய தொழிலாளர்கள் அங்கு உள்ள ஒரு கிராமத்தில் மின்வாரிய பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்த அங்கன்வாடி பள்ளியில் அவர்கள் தூங்குவது வழக்கம். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மின்வாரிய தொழிலாளர்கள் அங்கன்வாடி பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தபோது லவ்வேஷ் என்ற வாலிபரின் ஜீன்ஸ் பேண்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது

ஜீன்ஸ் பேண்டிற்குள் ஏதோ ஊர்வது போல உணர்ந்த தொழிலாளி ஜீன்ஸ்க்குள் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் தனது சக தொழிலாளர்களிடமும் இது குறித்து கூறினார். எங்கே அசைந்தால் பாம்பு கடித்து விடுமோ என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்த தூண் ஒன்றை பற்றிப் பிடித்தவாறு அசையாமல் நின்று கொண்டிருந்தார்

இது குறித்து தகவல் பாம்பு பிடிப்பவர்களுக்கு அனுப்பப்பட்டு பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு வந்து, சில மணி நேரம் போராடி அவருடைய ஜீன்ஸ் பேண்டை கிழித்து அந்தப் பாம்பை வெளியே வரவழைத்தார். பாம்பை வெளியே எடுக்கும் வரை சுமார் 7 மணி நேரம் அந்த வாலிபர் தூணைப்பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

More News

திடீரென கிளம்பிய இளம்பெண்ணின் BMW கார்: நாய்க்குட்டியால் ஏற்பட்ட விபத்து

டெல்லியில் இளம் பெண் ஒருவர் BMW காரில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென அவருடைய நாய்க்குட்டி துள்ளி குதித்ததால் அதிர்ச்சி அடைந்து தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்தார்.

காவல்துறையில் முதல் லெஸ்பியன் ஜோடி: நீதிமன்றம் சென்று உரிமையை நிலையாட்டிய இளம்பெண்கள்

குஜராத் காவல் துறையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களை லெஸ்பியன் என்று அறிவித்துக்கொண்டதோடு அதை நீதிமன்றத்திலும் சென்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

சுஷாந்தை அடுத்து பெண் தொகுப்பாளினி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பாதிப்பு இன்னும் மீளாத நிலையில்

இயக்குனராகும் நடிகர்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் 

தமிழ் நடிகர் ஒருவர் இயக்குனராகியுள்ள நிலையில் அவருடைய முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

தமிழக கவர்னருக்கு கொரோனா பரிசோதனை: சென்னை மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தங்கியிருக்கும் ராஜ்பவனில் ஏற்கனவே மூன்று பேருக்கும் கொரனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில்