close
Choose your channels

புகார் அளிக்க பெண் முன் சுய இன்பம்: வைரலான வீடியோவால் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

Wednesday, July 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்து பிரச்சனை தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளிக்க வந்த பெண் முன், சுய இன்பம் செய்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ வைரல் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பின்னர் காவல் துறையின் மரியாதை படு பாதாளத்துக்கு சென்று உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு கேவலமான சம்பவம் காவல்துறையில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா என்ற மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பெண் ஒருவர் சொத்து சம்பந்தமாக புகார் அளிக்க வந்தார். ஆனால் அந்தப் பெண்ணின் புகாரை வாங்கிக் கொண்டு அவர் முன் அந்த காவல்துறை அதிகாரி சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்து அந்தப் பெண் எரிச்சலடைந்து புகார் குறித்து எதுவும் பேசாமல் திரும்பி விட்டார்.

இதேபோல் இரண்டு மூன்று முறை அவர் காவல்துறையில் சொத்து பிரச்சனை காரணமாக புகார் அளிக்க வந்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் சுய இன்பம் செய்வது போலவே அந்த அதிகாரி செய்துள்ளார். இதனை அடுத்து அவர் மீண்டும் ஒருநாள் புகார் கொடுக்க சென்ற போது காவல்துறை அதிகாரி சுய இன்பம் செய்வதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டார். அந்த வீடியோ ஆதாரத்தை நேராக மாவட்ட எஸ்பி அவர்களிடம் கொடுத்து இதுகுறித்து அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.