close
Choose your channels

அன்னையர் தினத்தில் ஒரு அன்பான பெண் போலீஸ்

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் அன்னையர் தினம் வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் தாயுள்ளத்தோடு நடந்து கொண்ட செய்தி இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

உபி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கைக்குழந்தையுடன் தனது உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தைக்கு பால் கூட வாங்கி கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். குழந்தை பசியால் அழுததால் வேறு வழியின்றி குழந்தைக்கு தண்ணீர் மட்டும் கொடுத்துள்ளார்.

இதனை அந்த பக்கமாக சென்ற பெண் போலீஸ் கான்ஸ்டபிள் வர்ஷா என்பவர் பார்த்து, உடனே அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் உணவு வாங்கி கொடுத்ததோடு, செலவுக்கு பணமும் கொடுத்துள்ளார். மேலும் தனது மொபைல் எண்ணை கொடுத்து பத்திரமாக வீடுபோய் சேர்ந்ததும் தனக்கு போன் செய்து தகவல் அளிக்குமாறும் தெரிவித்துள்ளார். பெண் போலீஸ் வர்ஷாவின் இந்த தாயுள்ளம் குறித்த செய்தியும் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.