எங்களை மன்னித்து விடுங்கள்! டென்னிஸ் வீராங்கனையிடம் கதறும் கேரள நெட்டிசன்கள்… என்ன காரணம்?

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு நேற்று சச்சின் உள்ளிட்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பலர் பதிலடி கொடுத்து இருந்தனர். அவர்களின் கருத்துகள் அனைத்தும் இந்திய இறையாண்மை, ஒற்றுமை எனப் பல விஷயங்களைக் கொண்டு இருந்தாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த நெட்டிசன்கள் நேற்று முதல் இந்தியக் கிரிக்கெட் வீரர்களை தீட்டி தீர்த்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக ரஷ்யாவின் முன்னணி டென்னிஷ் வீராங்கனையான மரிய ஷரபோவோவிடம் சில நெட்டிசன்கள் மன்னித்து விடுமோறு கோரிக்கையும் வைத்து இருக்கின்றனர். காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு “சச்சின் என்றால் எனக்கு யாரென்றே தெரியாது“ என ஒரு பேட்டியில் மரிய ஷரபோவே பதில் அளித்து இருந்தார். இதனால் அப்போது கோபம் அடைந்த பல லட்சக்கணக்கான இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் அவரின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சில தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தனர்.

தற்போது சச்சின் மீது இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக பல இந்திய நெட்டிசன்கள் மரிய ஷரபோவிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் கடவுளின் சொந்த நாடான கேரளாவிற்கு வர வேண்டும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின் திருச்சூர் பூரம் பண்டிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்து மன்னிப்பு கோரி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இன்னொரு பதிவில், ஷரபோவா நீங்கள் சச்சினை பற்றி சரியாகத்தான் கூறியுள்ளீர்கள். தரமான மனிதர் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது எனப் பதிவிட்டு உள்ளார். ஆதோடு ஐஸ் வைக்கும் ஒரு நெட்டிசன் ஒருவர், குழிமந்தி பிரியாணியைத் தந்து மன்னிப்புக் கோருகிறேன். ஒரு லாரி நிறைய மன்னிப்பு ஏற்றி வருகிறேன் எனப் பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த மரிய ஷரபோவே விளையாட்டாக யாருக்கேனும் ஆண்டுகள் மறந்து விட்டதாக எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் சர்வதேச கிரிக்கெட்… போட்டிகள் குறித்த முழுமையான தகவல்!

இலங்கை அணியுடனான சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி விட்டு இந்தியாவிற்கு வந்து இருக்கின்றனர்.

முட்டாள்கள் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, லண்டனிலும் உள்ளனர்: எஸ்வி சேகர்

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்த பின்னரே

ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

அடுத்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்த சிம்பு: எப்போது ரிலீஸ்?

நடிகர் சிம்பு நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக குறைவாகவே ரிலீஸ் ஆனாலும் தற்போது அவர் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் என்பதும்

பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பது தவறா? சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்!

பூட்டிய வீட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.