close
Choose your channels

ஊரூர் ஆல்காட் குப்பம் விழா 2018 குறித்த அறிவிப்பு

Sunday, January 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊரூர் ஆல்காட் குப்பம் விழா என்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி அதாவது நாளை சென்னை திருவள்ளுவர் நகர் சமுதாய கூடம், 1-வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெசன்ட் நகர் என்ற இடத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தி டெம்ப்ஸ்ட் -- கிரியா சக்தி வழங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் தமிழ் நகைச்சுவை நாடகம் நடைபெறவுள்ளது. சம்யுக்தா இயக்கத்தில் முத்துமூர்த்தி இசையில் நடைபெறும் இந்த நாடகத்தில் கார்த்திக், கிரண், ஜார்ஜ், கீர்த்தி, விக்ரம், ஸ்ரீவத்ஸவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த விழாவின் இன்னொரு பகுதியாக அய்யப்பதாஸர் அவர்கள் தமிழ் பக்தி பாடல்களை பாடவுள்ளார். 62 வயதான அய்யப்பதாசர் சென்னையில் பிறந்து, கடந்த 55 வருடங்களுக்கு மேலாக பாடி கொண்டிருக்கிறார். 16 ஆண்டுகளுக்கு மேல் அவர் திரு நீடாமங்கலம் V.V. சுப்ரமணியம் மற்றும் நங்கநல்லூர் V. ராமநாதன் அவர்களிடம் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவர். இவரது இசையில் T M சௌந்தரராஜன், ஜேசுதாஸ், S P பாலசுப்ரமணியம், மனோ, மற்றும் வீரமணி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள ரம்யா என்பவரிடம் 9003287689 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.