நான் யார் தெரியுமா? ஜெயலலிதா பிரண்ட்.. ஊர்வசியின் 'J.பேபி' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,February 28 2024]

நடிகை ஊர்வசி முக்கிய இடத்தில் நடித்த J.பேபி’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்த திரைப்படம் J.பேபி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் தினேஷ், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் டோனி பிரிட்டோ இசையில் சுரேஷ் மாரி இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

ஊர்வசி இந்த படத்தில் மனநிலை சரியில்லாத நபராக நடித்திருப்பார் என ட்ரெய்லரில் உள்ள காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. சின்ன சின்ன திருட்டுகள், தேவை இல்லாத வம்புகள், போலீஸ்காரரிடமே இளக்காரமாக பேசுவது, நான் இந்திரா காந்தியின் பிரண்ட் , ஜெயலலிதாவின் பிரண்ட் என பேசுவதை பார்க்கும் போது அவரது கேரக்டர் இந்த படத்தின் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது.

ஒரு கட்டத்தில் அவரது செயல்களை கண்டு பொறுக்க முடியாத அவரது மகன் தினேஷ் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட அதன் பிறகு அவர் நிலை என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஊர்வசியின் முழு திறமையான நடிப்பை வெளிக் கொண்டு வரும் படமாக J.பேபி’ இருக்கலாம்.

 

More News

விஜய்யின் 'கில்லி' பட ரீ ரிலீஸ் தகவலில் உண்மையில்லை: ஏ.எம். ரத்னம்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் அந்த படங்களுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிறைவேறாத ஆசை குறித்து ஏக்கத்துடன் பதிவிட்ட செல்வராகவன்.. இனியாவது நிறைவேறுமா?

நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் தனது முக்கிய ஆசை நிறைவேறவில்லை என்று கூறி புதிய கெட்டப்புடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில்

தேடப்படும் குற்றவாளியாக பிரபல நடிகையை அறிவித்த நீதிமன்றம்.. உடனே கைது செய்ய உத்தரவு..!

கமல்ஹாசன், விஜயகாந்த் உட்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை உடனே கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீயே ஒரு பிராடு, நீ முத்துவ சந்தேகப்படுறியா? 'சிறகடிக்க ஆசை' ரோஹினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

முத்து ஒரு திருடனாக இருக்க வேண்டும் அல்லது திருடனின் நண்பனாக இருக்க வேண்டும் என்று ரோஹினி சந்தேகப்படும் நிலையில் 'நீயே ஒரு பிராடு, நீ முத்துவை சந்தேகப்படுறியா? என ரசிகர்கள் 'சிறக்கடிக்க ஆசை'

மாடர்ன் ட்ரெஸ்ஸில் வேற லெவல் லுக்.. பிக்பாஸ் ரக்சிதா மகாலட்சுமியின் போட்டோஷூட்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா மகாலட்சுமி பெரும்பாலும் சேலை காஸ்டியூமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் திடீரென