அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல பாலிவுட் நடிகை

  • IndiaGlitz, [Monday,September 23 2019]

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் வசூல் சாதனை செய்த நிலையில் இந்த படத்தில் ‘பிங்க்’ படத்தில் இல்லாத அஜித்-வித்யாபாலன் குறித்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் வித்யாபாலன் கேரக்டரில் முதலில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரெளட்டிலே என்பவரை போனிகபூர் அணுகியதாகவும் ஆனால் அவர் ஏற்கனவே வேறு சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால் போனிகபூர் கேட்கும் தேதியை அவரால் கொடுக்க முடியவில்லை என்றும், அதனால் அஜித் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இருப்பினும் தான் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டதாக ஊர்வசி தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் பின்னரே வித்யாபாலனை போனிகபூர் அணுகியதாகவும், போனிகபூரின் கோரிக்கையை மறுக்க விரும்பாத வித்யாபாலன் இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கொடுத்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.
 

More News

எமிஜாக்சனுக்கு ஆண் குழந்தை: வைரலாகும் முத்த புகைப்படம்

இயக்குனர் விஜய் இயக்கிய 'மதராஸப்பட்டினம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமிஜாக்சன் அதன்பின் 'தெறி, தங்க மகன், 2.0', ஐ'  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்

சிரஞ்சீவியின் காலில் திடீரென விழுந்த விஜய்சேதுபதி! ஏன் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் இணைந்து நடித்த திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி, வரும் அக்டோபர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் இரு விருந்தினர்கள்!

Rithvika and Janani are visiting bigg boss Read more at: https://tamil.filmibeat.com/television/bigg-boss-tamil-3-rithvika-and-janani-to-visit-bigg-boss-house/articlecontent-pf109032-063350.html

'சயிரா நரசிம்மரெட்டி சென்சாரில் ஒரு ஆச்சர்யம்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

தலைவர் பதவியை பிடிக்க தரையில் உருளும் போட்டியாளர்கள்

ஒவ்வொரு வாரமும் கேப்டன் பதவியை பிடிக்க ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் கேப்டன் போட்டியில் பங்கேற்க கவின், முகின், சாண்டி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்