கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்காகப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசியை தற்போது இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இந்தியாவைத் தவிர அவசரகால அடிப்படையில் உலகின் பல நாடுகளுக்கும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசியை தற்போது அமெரிக்காவில் பயன்படுத்த அந்நாட்டின் ஒகுஜென் நிறுவனம் சார்பில் அனுமதி கோரப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஒகுஜென் நிறுவனம் அமெரிக்காவில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த கூடுதல் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்குமாறும் அந்நட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு WHO அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால் இந்தத் தடுப்பூசியை இம்யூன் பாஸாக எடுத்துக் கொள்ள முடியாது எனப் பல தரப்புகளில் இருந்தும் கருத்துகள் கூறப்பட்டது. மேலும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு இருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் சந்தேகம் கிளப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் தன் நாட்டில் கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பெண்களை ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர் மீது கிரைம் போலீசார் வழக்கு!

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளினால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பங்கள் அரங்கேறியது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் ஐபிஎஸ் நியமனம்....! நடுங்கும் அரசியல் பிரமுகர்கள்...!

முன்னாள் ஐபிஎஸ்-ஆக இருந்த லட்சுமி அவர்கள், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட உள்ளார்.

நடிகர் பாலசரவணன் வீட்டில் கொரோனாவால் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்த ஒருசிலரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜக பிரமுகர் புகார் எதிரொலி: பிரபல நடிகை-இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு!

பாஜக பிரமுகர் ஒருவர் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இணைந்த வரலட்சுமி!

பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து