கொரோனா மருந்தை கொடுக்காவிட்டால்? இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸை குணமாக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்யுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த டிரம்ப், இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தாலும் அமெரிக்காவிற்கு மட்டும் இந்த தடையை நீக்க வாய்ப்புள்ளது. நான் இதுகுறித்து இந்திய பிரதமர் மோடியிடம் பேசியுள்ளேன். அவரும் நல்ல பதிலை அளித்துள்ளார்

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் என நம்புகிறேன். ஒருவேளை ஏற்றுமதி செய்யாவிட்டாலும் ஓகேதான். ஆனால் இந்தியா மருந்தை தர மறுத்தால் தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
 

More News

ஏப்ரல் 14ல் நல்ல செய்தி வரும்: 'மாஸ்டர்' படத்தின் மாஸ்டர் நடிகரின் டுவிட்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை மோசம்: ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் கடந்த மாதம் 26ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் தனக்குத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார்

இன்று ஒரே நாளில் 15 பேர்: கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்தது சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்

நிறைமாத கர்ப்பிணிகளுக்கு இலவச வாகன சேவை செய்யும் சென்னை இளைஞர்

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி சரியாக கிடைக்காத நிலையில் சென்னையில் இளைஞர் ஒருவர் இலவச வாகன சேவை செய்து வருகிறார்.

இன்று கொரோனாவால் பாதித்தவர்கள் எத்தனை பேர்? பீலா ராஜேஷ் தகவல் 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.