close
Choose your channels

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்புகள்!!! இந்தியா குறித்த செய்திகள்!!!

Saturday, May 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்புகள்!!! இந்தியா குறித்த செய்திகள்!!!

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் கண்டுபிடிக்கப்படும் என மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இதற்காக “ஆப்ரேஷன் வார்ப் ஸ்பீட்’ என்ற திட்டத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் போது உலகின் முதல் அணு ஆயுதங்களை உருவாக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட திட்டம்தான் இந்த “ஆப்ரேஷன் வார்ப் ஸ்பீட்”. அணு ஆயுதங்களை விரைவாக உருவாக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் பெயரில் தற்போது கொரோனா தடுப்பூசி ஆய்வை விரைவு படுத்தியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

இந்த கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சித் திட்டத்திற்கு 14 முக்கிய விஞ்ஞானிகள் நியமிக்கப் படுவார்கள் எனவும் கூறபடுகிறது. இதுவரை அமெரிக்காவில் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய அறிவியல் தொழில்துறை முயற்சி இது எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பதும் நடக்காத காரியம் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசியைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை கைவிடுமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா குறித்த ஆய்வுகள் மிக விரைவாக நடத்தப்பட்டு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் விரைவு படுத்தப்படும். எனவே அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தடுப்பூசி இருந்தாலும் இல்லையென்றாலும் அமெரிக்க இயல்பு நிலைக்கு திரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க வென்டிலேட்டர் கருவிகளை இந்தியாவிற்கு தனாமாக கொடுக்க முன்வந்துள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி ஆய்வுகளில் இந்திய விஞ்ஞானிகளும் அமெரிக்க விஞ்ஞானிகளும் ஒன்றாக இணைந்தே பணியாற்றி வருகின்றனர். தற்போது ட்ரம்ப் “இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்றும், கண்ணுக்கு தெரியாத இந்த எதிரியை இரு நாடுகளும் இணைந்து ஒழிக்கும்” என இந்தியாவுடன் நட்பு பாராட்டும் விதமாக பேசியிருக்கிறார். கொரோனா குறித்த சீனாவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவுடன் இந்தியா கைக்கோர்க்குமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.