close
Choose your channels

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

Wednesday, February 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

 

 

உலகில் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை திங்கட் கிழமை அன்று உறுதி செய்தது.

கடந்த செப்டம்பரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குச் சென்ற போது இந்தியாவிற்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அதிபர் ட்ரம்ப் தற்போது இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த பயணத்தில் புதுடெல்லி மற்றும் குஜராத் பகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிபர் ட்ரம்ப் உடன் அவரது மனைவி மெலினா ட்ரம்ப்பும் வருகை தர இருக்கிறார்.

கடந்த ஆண்டில் உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடுகளாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடும் வர்த்தகப் போரில் ஈடுபட்டன. அதே நாட்களில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகப் படியான இறக்குமதி வரியை விதிக்கிறது எனக் குற்றம் சாட்டி இருந்தார். அதனையொட்டி இந்தியா சில பொருட்களுக்கு குறைந்த அளவில் வரியினை குறைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கி வந்த சிறப்பு பொருளாதார விதிமுறைகளை தடை செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நேரத்தில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில், வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க வாழ் இந்தியவர்களை ஈர்க்கும் விதமாகவே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா – அமெரிக்கா இறக்குமதி பொருட்கள் மீதான வரி குறைப்பு பற்றி பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும் இதில் மாற்றங்கள் வரும் என்றும் எதிர்ப் பார்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், வாஷிங்டனில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில், இந்தியா 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீடில் 24 MH-60R SEAHAWK ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது என தெரிய வருகிறது. எனவே இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் என எதிர்ப் பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்களை வாங்குவதை 2007 இல் இருந்து நிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கது. அமெரிக்கா – சீனா வர்த்தப் போர் நீடிக்கும் தருவாயில் இந்தியா அமெரிக்காவிடம் பாதுகாப்பு கருவிகள் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் மேலும் நட்புணர்வை வலுப்படுத்தும் எனவும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்கிற ரீதியில் பல முறை அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்து இருந்தார். செய்தியாளர்கள் பிரதமர் மோடியிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, “காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் அனுமதிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் இரு நாடுகள் மட்டும் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.

தற்போது காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப் பட்ட நிலையில் இது குறித்து அதிபர் ட்ரம்ப் பேசுவாரா அல்லது தனது கருத்தைத் தெரிவிப்பாரா என்கிற நோக்கில் எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட பின்பு முதல் முறையாக இந்தியா வருகிறார் என்பதும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.