நொய்யல் ஆற்றின் நுரைக்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்: தமிழக அமைச்சர்

  • IndiaGlitz, [Sunday,September 24 2017]

தமிழக அமைச்சர்களின் ஒருசில செயல்பாடுகள் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருப்பதால் பொதுமக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அமைச்சர் ஒருவர் தெர்மோகோல் போட்டு மூடும் முயற்சி சமூக வலைத்தளங்களால் கிண்டலுக்கு உள்ளானது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததை அடுத்து நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிந்தது. இதற்கு சாயக்கழிவுகளால் ஏற்பட்ட மாசுபாடே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய அமைச்சர் கருப்பண்ணன் நேரில் வந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, குடிநீரில் சுமார் 500 என்கிற அளவில் உப்பு இருக்கலாம் என்றும், தற்போது ஆற்றில் 700 என்கிற அளவிலேயே உப்பு இருப்பதாகவும், 1200 என்கிற அளவில் இருந்த உப்பின் அளவு குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் நொய்யல் ஆற்றில் அதிகளவில் நுரை உள்ளதாகவும், இது சாயக் கழிவுகளால் ஏற்பட்டது என்ற புகார் எழுந்தது. ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் சோப்பு போட்டு குளிக்கும்போது வெளியேறும் கழிவுநீர் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

More News

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்': திரை முன்னோட்டம்

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் ஸ்பைடர்'. நம்மூர் விஜய்க்கு சமமாக தெலுங்கில் பிரபலமான மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்

'இமைக்கா நொடிகள்' சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

'பாகுபலி'யுடன் கனெக்சன் ஆகும் மகேஷ்பாபு

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் என்னவாக இருக்கும், அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க கொடுத்து வைத்திருக்கும் நாயகன் யார்? என்ற கேள்விகள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டிருக்கும் நிலையில்

இணையதளங்களை பரபரப்பாக்கியுள்ள சிம்புவின் புதிய தோற்றம்

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதில் ஒன்று அவருடைய உடல் எடை என்றும் கூறப்படுவதுண்டு.

தனுஷ் படத்தின் வில்லனாகும் தனுஷ் பட நாயகன்

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா', தனுஷ் நடிக்கும் 'வடசென்னை மற்றும் மலையாள திரைப்படமான 'தரங்கம்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.