close
Choose your channels

இன்று மாலை மணிரத்னம் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு!

Monday, November 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு ரூபாய் 500 கோடிக்கு மேல் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடக்கும் இந்த படத்தில் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிய உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தாய்லாந்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இன்னொரு திரைப்படமான 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனாசேகரன் என்பவர் இயக்கி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்து வருகின்றனர். சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் நீண்ட இடைவேளைக்குப் பின் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன், நிவேதாதுரைராஜ், சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வருகின்றனர் ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவில், சங்கத்தமிழன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.