close
Choose your channels

நிறைவேறாமல் போன வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை: நண்பர் உருக்கம்

Friday, September 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று காலமான செய்தி சின்னத்திரை மற்றும் பெரியதிரை நட்சத்திரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்போது அவருடைய நெருங்கிய நண்பர் அமுதவாணன் என்பவர் வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டது என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘வடிவேல் பாலாஜியின் மறைவு எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்து யோசித்தாலே மிகவும் படபடப்பாக இருக்கிறது. ’அது இது எது’ நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் செய்ய வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.

அது மட்டுமின்றி வடிவேல் பாலாஜி தன்னுடைய மனைவியுடன் கலந்துகொள்ளும் 'Mr&Mrs சின்னத்திரை' என்ற நிகழ்ச்சியை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருடைய இந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று வேதனையுடன் அமுதவாணன் கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்

சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் மிகப்பெரிய அளவில் வளர வேண்டிய ஒரு கலைஞர், இளம் வயதிலேயே மரணம் அடைந்துவிட்டது அவரது குடும்பத்தினர்களுக்கு மட்டுமின்றி திரையுலகிற்கே ஒரு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.