close
Choose your channels

'நாய்சேகர்' டைட்டில் கிடைக்காததால் வடிவேலு படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வந்துள்ளார் என்பதும், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே சதீஷ் நடிக்கும் படத்திற்காக இந்த டைட்டிலை பதிவு செய்திருப்பதால் இந்த டைட்டில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வடிவேலு தரப்பினர் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் சுராஜ்-வடிவேலு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘நாய் சேகர்’ என்ற டைட்டில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடிவேலு படக்குழுவினர் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் படி ’நாய் சேகர்’ டைட்டில் கிடைக்காததால் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.