அகல்யா வெங்கடேசன்: ரீஎண்ட்ரிக்கு முன்பே வைரலாகும் வடிவேலு வீடியோ!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

வைகைப்புயல் வடிவேலு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பதும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டதை அடுத்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

லைகா நிறுவனத்தின் 5 திரைப்படங்களில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் அவற்றில் ஒன்று சுராஜ் இயக்கும் ’நாய் சேகர்’ என்றும் தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல விஜே அகல்யா வெங்கடேசன், வடிவேலுவை சந்தித்து வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டார். அதில் அவர் வடிவேலுவிடம் தனது பெயரை ஒரே ஒருமுறை சொல்லும்படி கேட்க அதற்கு வடிவேலு தனது பாணியில் அவரது பெயரைச் சொல்ல இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வடிவேலுவை இது மாதிரி பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்றும் விரைவில் அவரை திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More News

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகைகள்?

கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் சிக்கி வருவது தொடர்கதையாகி வருவது தெரிந்ததே. பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர்

82 வயதில் விஷால் தந்தைக்குக் கிடைத்த பெருமைக்குரிய பதவி!

பிரபல நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி அவர்களுக்கு 82 வயதில் பெருமைக்குரிய பதவி கிடைத்தது குறித்து விஷால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜிபி முத்து பிக்பாஸ் போட்டியாளரா? வைரல் புகைப்படம்!

டிக் டாக் மூலம் நகைச்சுவையான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து, அதன்பின் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் யூடியூபில் பிரபலமடைந்தார்.

ஒரே ஆட்டத்தில் ரசிகர்களை மிரட்டிவிட்ட இந்திய வீரர்… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் மேட்சில் இந்திய இளம் வீரர் ஷர்துல் தாகூர் வெறும் 31 பந்துகளில் அரைச்சதத்தை அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்

ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசும் இங்கிலாந்து வீரர்… மிரண்டுபோன ரசிகர்கள்!

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.