close
Choose your channels

இயக்குனர் சசிகுமாரையாவது காப்பாற்றுங்கள்: காவல்துறைக்கு வைகோ வேண்டுகோள்

Thursday, November 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இயக்குனர் சசிகுமாரையாவது கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து காவல்துறை பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சினிமா துறையைச் சேர்ந்த அசோக்குமார் கந்து வட்டி கொடுமையில் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்தத்துக்குரியது. இயக்குனர் சசிகுமாரையாவது காவல்துறை பாதுகாக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பளிக்காமல் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்

திரையுலகினர் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் அசோக்குமாரின் மரணத்திற்கு நீதிகேட்டு குரல் கொடுத்து வருவதால் இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் தீவிர அக்கறை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.