இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்: வைரமுத்து இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ்.படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவர் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது சடலம் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் இன்சுலின் அவரது உடலில் செலுத்தப்பட்டுள்ளதால் மரணம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இன்சுலீனை மாணவரே செலுத்தி கொண்டாரா? என்பது குறித்த மர்மமும் நீடித்து வருகிறது.

டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்கள் திடீரென மாயமாக மறைவதும் மர்மமாக மரணம் அடைவதும் கடந்த சில மாதங்களாக தொடர்கதையாக இருந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள கவியரசர் வைரமுத்து, 'டெல்லி மருத்துவக் கல்லூரித் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ச்சியான மரணங்கள் ஆரோக்கியமானதில்லை. மாணவர்கள் இறக்கிறார்கள்; மரணங்கள் இறக்கவில்லை. காரணம் கண்டறியப்பட வேண்டும். இந்த வகையில் இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்' என்று தெரிவித்துள்ளார்,.

 

More News

கட்சியை விட்டு நீக்கிய கார் டிரைவருக்காக தர்ணா செய்த தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த ஆண்டு எம்ஜிஆர் அம்மா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியில் அவருடைய கணவர் மாதவனுக்கு இருந்த மரியாதையைவிட அவரது கார் டிரைவரான ராஜாவுக்கு இருந்தது

ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் பணிபுரியும் ஸ்டண்ட் சில்வா

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கின்றது. 2.0, விஸ்வரூபம் 2 முதல் மாரி 2 வரை சுமார் பத்து இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

வேலைக்காரனை சந்தித்த வேலாயுதம் - காரணம் என்ன ?

கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்'. இந்த படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன், மோகன்ராஜா ஆகியோர்களின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

ரூ.100 கோடி மதிப்பில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது.

நடிகை தேவயானிக்கு ஏற்பட்ட மிகப்பேரிய இழப்பு

பிரபல நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 73.