சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா? வைரமுத்து கேள்வி

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

சூரியனால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு ஒரே நேரத்தில் பகலை கொடுக்க முடியாதபோது இந்தியால் மட்டும் எப்படி ஒரே இந்தியாவிற்கு ஒரே மொழியாக இருக்க முடியும் என்ற கேள்வியை கவியரசு வைரமுத்து எழுப்பியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த விழாவில் வைரமுத்து கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

'இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்ற ஒரு கருத்து அண்மையில் உரைக்கப்பட்டது. அதில் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தி மொழி பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது. சூரியன்கூட இந்த ஒட்டுமொத்த பூமிக்கு ஒரே பகலைக் கொண்டு வந்து இணைக்கமுடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும்?

இரு மொழிக் கொள்கை என்பது தான் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்து கொடுத்த ஜீவ கொள்கை. இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள். அரசு உறுதியாக இருக்க வேண்டும், என விரும்புகிறோம்' என்று கூறினார்.
 

More News

தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்து: மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஜாதி பாகுபாடு குறித்து பேசிய நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கவின் - லாஸ்லியா காதலை விட சுபஸ்ரீ மரணம் முக்கியம்: தமிழ் நடிகர் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதல் குறித்தே பலர் விவாதம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி, அதில் நடப்பவற்றை பேசுவதைவிட, சுபஸ்ரீ என்ற உயிர் பேனரால் இழக்கப்பட்டுள்ளது

இந்தி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்: வலியுறுத்தும் தமிழ் நடிகை

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஒரே நாடு ஒரே மொழி' என இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஒரு கருத்தை கூறினார்.

வனிதாவை அடுத்து வெளியேறும் இருவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஏழு பேர் மட்டுமே உள்ளனர். இதில் இன்னும் இருவர் வெளியேற்றப்பட்டவுடன் ஐவர் இறுதி போட்டிக்கு செல்வர்

வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்: சுபஸ்ரீ விபத்து குறித்து கமல்!

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்திற்கு பரிதாபமாக பலியான பின்னரே பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் கூறி வருகின்றனர்.