வான்வழி வந்தோர் மேன்மக்கள், மண்வழி சென்றோர் கீழ்மக்களா? வைரமுத்து

கேரளாவில் சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு இயற்கை பேரிடர் அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஒன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரோடு சுமார் 80 பேர் புதையுண்டதாகவும், இதுவரை சுமார் 60 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் மண்ணில் புதையுண்டவர்களை கடந்த ஒரு வாரமாக மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக உள்ளனர்

இதேபோல் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சுமார் 20 பேர் மரணமடைந்தனர் என்பதும், பலர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசியல்வாதிகள் சிலர் விமான விபத்து மீட்புப்பணிகளில் காட்டும் அக்கறையை நிலச்சரிவு மீட்புப் பணியில் கேரள அரசு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்

இது குறித்து கவிஞர் வைரமுத்துவும் தனது சமூக வலைத்தளத்தில் கவிதை வடிவில் ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விமான விபத்து மீட்சியைத்
திறம்பட நிகழ்த்திய கேரள
ஆட்சியைப் பாராட்டுகிறோம்.
அதேபோல் மண்ணில் புதைந்த
மக்களுக்கும் விரைந்த மீட்பும்
தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.
வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;
மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா என்ன?

கவிஞர் வைரமுத்துவின் இந்த டுவிட்டுக்கு ஆதரவு கமெண்ட்டுக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

More News

எந்த முகக்கவசம் நல்லது- ஆராய்ச்சியில் வெளியான அதிரடி தகவல்!!!

கொரோனா வைரஸ் உலகத்தின் மூலை முடுக்குகளிலும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்த முடியாத நிலைமையை உருவாக்கி இருக்கிறது

கொரோனா தாக்கம்- மாணவர் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 நிர்ணயித்த கல்லூரி!!! ஆச்சர்யத் தகவல்!!!

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கிறது.

கொரோனா நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த வித்தியாசமான முயற்சி

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று கூட 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்

சூர்யாவை அடுத்து சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை!

மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் கொள்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இது குறித்து தங்களது ஆக்கபூர்வமான கருத்தை தெரிவித்தார்கள்

அஜித்தால் மோகன்லால் படத்தை தள்ளி வைத்தாரா சிரஞ்சீவி? பரபரப்பு தகவல்

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் கடந்த ஆண்டு 'சயிர நரசிம ரெட்டி' படத்தின் மூலம் பிரமாண்டமாக ரீ-என்ட்ரி ஆனார் என்பதும் அந்த படத்தை அடுத்து தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில்