close
Choose your channels

அசைக்க முடியாத ஆதாரம் உள்ளது: சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து பதில்

Sunday, October 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்பு செய்தியாகவும், விவாத பொருளாகவும் இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் வைரமுத்து தற்போது மெளனத்தை கலைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

என்மீது குற்றம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உள்நோக்கம் உடையது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தால் வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன். மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலக ஆன்றோர்களிடமும் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன்.

அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். நான் கெட்டவனா? நல்லவனா? என்பதை இப்பொழுது யாரும் முடிவு செய்ய வேண்டாம். என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க காத்திருக்கின்றேன். நீதிக்கு தலை வணங்குகிறேன் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.