close
Choose your channels

நாட்டு மக்களுக்காக வைரமுத்து செய்த உதவி!

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கும் உதவிகளும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கோடி கணக்கில், லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான இடம் இல்லாததால் தனியார்கள் பலரும் தங்களுடைய இடத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக கமலஹாசன் தனது ஆழ்வார்பேட்டை வீட்டையும், திமுக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கையும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது திருமண மண்டபத்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தங்கள் இடத்தை கொடுக்க முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் இதேபோல் ஒரு உதவியை நாட்டு மக்களுக்காக செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.