close
Choose your channels

இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்: வைரமுத்து

Friday, February 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் திரைப்படங்கள் பிராந்திய மொழி திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்ட நிலையில் தற்போது பல தமிழ் திரைப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன என்பதும் சர்வதேச விருதுகளையும் பல தமிழ் திரைப்படங்கள் குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ’என்றாவது ஒருநாள்’ க/பெ ரணசிங்கம் மற்றும் ‘சியான்கள்’ ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருதுகளை பெற்று தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

'என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’,
'சீயான்கள்’ - ஆகிய திரைப்படங்கள்
சர்வதேச விருது கொண்டது
பெருமிதம் தருகிறது.

முதலிரு படங்களுக்கு
நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது
பரவசம் தருகிறது.

விரைக தமிழர்களே!
இனி
அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்

இந்த நிலையில் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் சர்வதேச விருதை பெற்றுள்ளதை அடுத்து படக்குழுவினர் அந்த படத்தில் சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.