சிம்பு படத்தை தூக்கி நிறுத்துமா வைரமுத்துவின் 'ரத்தம்'

  • IndiaGlitz, [Friday,June 02 2017]

சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்ட நிலையில் நேற்று முதல் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பாடலை சிம்புவிற்காக கவியரசர் வைரமுத்து முதன்முதலாக எழுதியுள்ளார்.

'ரத்தம் என் ரத்தம்' என்று தொடங்கும் இந்த பாடல், படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும், படத்தையே இந்த ஒரு பாடல் தூக்கி நிறுத்தும் அளவிற்கு உள்ள வலிமையான வார்த்தைகள் அடங்கிய பாடல் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் ரம்ஜான் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் அச்சம்

இந்திய தலைநகர் டெல்லி அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் அச்சம்...

இசையுலகின் ஒரே ராஜா, அவர்தான் இளையராஜா:

இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே இசையை ரசித்து கொண்டிருந்த நிலையை மாற்றி முதல்முதலாக பாமரனையும் தலையாட்டும்...

என் வேலையை நயன்தாரா சுலபமாக்கிட்டாங்க. 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நயன்தாரா குறித்து ஒரு விஷயத்தை அவரை இயக்கிய அனைத்து இயக்குனர்களும் கூறுவதுண்டு...

ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் முதல் விக்கெட்டை வீழ்த்திய டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் ...

'இமைக்கா நொடிகள்' படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இதுதான்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ...