பூக்காரிக்கு பொருள் கொடுத்தேன்...! மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கவிஞர்...!

இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்கள் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தினக்கூலிகள் பலரும் பொருளாதார ரீதியாக ஏராளமான துன்பவங்களை அனுபவித்து வருகிறார்கள். அந்தவகையில் சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பலரும் பொதுமக்களுக்கு நிதி உதவியும், பொருள் உதவியும், உணவும் தந்து உதவி வருகிறார்கள்.

ஊரடங்கில் பூ விற்பவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் பூ விற்கும் பெண்கள் சிலருக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் பொருட்கள் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

'ஊரடங்கில்
பூவும் வாழ்வும் வாடிப்போன
பூக்காரிகள் சிலருக்குப்
பொருள் கொஞ்சம் கொடுத்தேன்

பண்புடையீர்!

உங்களைச்
சூழ்ந்திருக்கும் சமூகத்தை
ஆழ்ந்து பாருங்கள்

அற்ற வயிறும்
இற்ற உயிரும்
எத்துணையோ?

சற்றே உதவுங்கள்

சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு
சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு
என பதிவிட்டுள்ளார்.

 

More News

மின்கட்டணம் அளிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு விலக்கு தேவை....! சீமான் அரசுக்கு கோரிக்கை....!

தமிழகத்தில் மின்கட்டணத்தை செலுத்த பொதுமக்களுக்கு 2 மாதங்களுக்கு விலக்க அளிக்க வேண்டும் என, தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்

மொட்டை ராஜேந்திரனுடன் விஜய் மகன், மகள்: வைரலாகும் 'தெறி' படப்பிடிப்பு புகைப்படம்!

தளபதி விஜய்யின் 'தெறி' படப்பிடிப்பு நடைபெற்றபோது அந்த படப்பிடிப்பிற்கு வந்திருந்த விஜய் மகன் சஞ்சய் மற்றும் விஜய் மகள் திவ்யா ஆகியோர்  நடிகர் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து எடுத்த

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இவர்? வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது

என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடம்: கணேஷ் வெங்கட்ராமன் மனைவியின் சோகப்பதிவு

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன் என்பதும் இவர் 'அபியும் நானும்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்

பாபா ஒரு மகான், அவர் மீது சுமத்தப்பட்டது பொய்க்குற்றச்சாட்டு: தமிழ் நடிகர் பேட்டி!

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என நடிகரும் அவரின் சீடருமான