பாலூட்டிய தாய், பாட்டூட்டிய தாய்.. இருவருக்கும் உடல்நலமில்லை: வைரமுத்து உருக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனக்கு பாலூட்டிய தாய் மற்றும் பாட்டூட்டிய தாய் ஆகிய இருவருக்கும் உடல் நலம் இல்லை என்பது தனது மனதுக்கு மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது என கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் தன்னுடைய தாயார் அங்கம்மாள் ராமசாமி என்பவரும் பிரபல பின்னணி பாடகி பி சுசிலா ஆகிய இருவரும் உடல்நலமில்லாமல் இருப்பதை குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு இதோ:
இருபெரும் தாயர்க்கு
உடல் நலமில்லை
ஒருவர்
எனக்குப் பாலூட்டிய தாய்
அங்கம்மாள் ராமசாமி
இன்னொருவர்
எனக்குப் பாட்டூட்டிய தாய்
பி.சுசீலா
நாட்டார் தமிழைக்
கற்பித்தவர் பெற்றதாய்;
பாட்டார் தமிழைக்
கற்பித்தவர் உற்றதாய்
தாங்குதுணை இல்லாமல்
தன்னியக்கம் இல்லை
இருவர்க்கும்
சற்றொப்பச் சமவயதுகொண்ட
தாய்மார்கள்
இருவர்க்குமே வாழ்வு
சர்க்கரையால் கசக்கிறது
நான் பாசத்தோடு படைக்கும்
சத்துமாவுக் கஞ்சிதான்
இருவர்க்கும் ஆகாரம்
இருவரையும்
மாறிமாறி நலம்கேட்கிறேன்
அந்த நான்கு கரங்களையும்
பற்றும்பொழுது
நடுங்குகின்றன
என்னிரு கரங்களும்
இருபெரும் தாயரும்
நலமுற வேண்டும்;
நெடுங்காலம்
நீடு வாழவேண்டும்
"பறவை பறந்துசெல்ல
விடுவேனா - அந்தப்
பரம்பொருள் வந்தாலும் தருவேனா?
உன்னை அழைத்துச்செல்ல
எண்ணும் தலைவனிடம்
என்னையே நான்தர மறுப்பேனா?"
ஒருவர் பாடிய பாடல்
இருவர்க்கும் காணிக்கை
அன்னையர் இருவரும்
ஆண்டுபல நீண்டுவாழ
வேண்டுமென்று
வேண்டுகின்றேன்
யாண்டுமுள்ள நண்பர்களை
இருபெரும் தாயர்க்கு
— வைரமுத்து (@Vairamuthu) April 10, 2025
உடல் நலமில்லை
ஒருவர்
எனக்குப் பாலூட்டிய தாய்
அங்கம்மாள் ராமசாமி
இன்னொருவர்
எனக்குப் பாட்டூட்டிய தாய்
பி.சுசீலா
நாட்டார் தமிழைக்
கற்பித்தவர் பெற்றதாய்;
பாட்டார் தமிழைக்
கற்பித்தவர் உற்றதாய்
தாங்குதுணை இல்லாமல்
தன்னியக்கம் இல்லை
இருவர்க்கும்
சற்றொப்பச்… pic.twitter.com/aEcy7wJGyu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com