மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திரையுலக பிரபலங்கள் பலரும் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் என்பதும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பதும் தெரிந்ததே

மேலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. ???? #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை

இந்த நிலையில் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கை குறித்து கவியரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

நகலெடுக்க முடியாத
உடல்மொழி

சூரியச் சுறுசுறுப்பு

கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்

45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்

இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்

இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு

More News

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில்

கண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி

கணவர் இறந்துவிட்டதாக கருதி அவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு கணவர் கண் முன்னே வந்து நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா?

சமீபத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரை இறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது என்பது தெரிந்ததே. இந்த விமான விபத்தில் கேப்டன் டிவி சாதே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார்

16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது

புனே அருகே ஒரு பெண் தனது 16 வயது மகளை தனது உறவினர் பெண் வீட்டில் ஊரடங்கு நேரத்தில் விட்டு சென்று உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விட்டுச்சென்ற அந்த பெண்

ரஷ்ய நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் பலி: ஒருவர் சென்னை மாணவர் என தகவல்

தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் அங்குள்ள ஒரு நதியில் மூழ்கி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.