நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல: வைரமுத்து

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பரபரப்பு நீங்காத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு மாணவர்களின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிகாலை மதுரையில் ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்

அடுத்தடுத்து மூன்று மாணவ மாணவிகள் தமிழகத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதை அடுத்து நீட் தேர்வுக்கு எதிரான கோஷங்கள் வலுத்து வருகின்றது. இந்த நிலையில் பலத்த எதிர்ப்பையும் மீறி நாளை தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகள் எந்த காரணத்தை முன்னிட்டும் பயம் கொள்ளவேண்டாம் என்றும் தற்கொலை ஒரு தீர்வும் அல்ல என்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!

நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.

பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.

அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.

நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.

நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.

More News

படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம்: மதுரை மாணவி தற்கொலை குறித்து பிரபல இயக்குனர்!

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் நீட் தேர்வு பயம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்ட தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்போன் அழைப்பை எடுக்காத காதலி: சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சென்னை வாலிபர்!

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக் கொண்டதால்

கொரோனாவை குணமாக்கும் கருப்புத்தங்கம்: வைரமுத்து!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்றும் கூட தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும்

போதைப்பொருள் வழக்கு: ரியாவின் வாக்குமூலத்தில் சிக்கிய சூர்யா, கார்த்தி, தனுஷ் பட நடிகைகள்?

கன்னட திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் திரை உலகிலும் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி

வைகை புயலுக்கு வாழ்த்துக்கள்: இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

தமிழ் திரையுலக வரலாறு எழுதினால் அதில் வடிவேலுவை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு சினிமா நகைச்சுவையில் கொடிகட்டி பறந்து வரும் வைகைப்புயல் வடிவேலு