close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' பாடல்களில் வைரமுத்து செய்யப்போகும் புதுமை!

Sunday, September 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலான ‘பொன்னியின் செல்வன்’, மணிரத்னம் அவர்களால் இரண்டு பாகங்களாக திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அவர் கம்போஸ் செய்யும் டியூன்களுக்கு ஏற்ற வகையில் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதவுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் நடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் சொற்களை இந்த கால இளைஞர்களுக்கும் புரியும் வகையில் பாடல் வரிகளில் வைரமுத்து புதுமை செய்யவிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.