இன்று வெளியாகும் 'வலிமை' சிங்கிள் பாடல் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 01 2021]

தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தில் சிங்கிள் பாடல் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு ’வலிமை’ திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவரும் என்றும் இந்த பாடல் இன்று நள்ளிரவு 12 மணிக்கு அல்லது நாளை வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. யுவன்சங்கர்ராஜா கம்போஸ் செய்த இந்த பாடல் ஒரு அம்மா சென்டிமென்ட் பாடல் என்றும் இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதி உள்ளதாகவும் சித்ஸ்ரீராம் பாடி உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த பாடல் இதுவரை வெளிவந்த அம்மா சென்டிமென்ட் பாடல்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் அஜீத் அம்மாவாக பழம்பெரும் நடிகை சுமித்ரா நடித்திருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது தெரிந்தது. தமிழ் திரை உலகில் இதுவரை வந்த அம்மா சென்டிமென்ட் பாடல்கள் அனைத்துமே கிட்டத்தட்ட ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நிரூப்பை மாறி மாறி கலாய்க்கும் ராஜூ, இமான், அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இரு அணிகளாக பிரிந்து பிக்பாஸ் போட்டியாளர்களின் பழைய நிகழ்வுகளை வெளியே கொண்டுவந்து

அடுத்தடுத்து வெளியாகும் 'வலிமை' அப்டேட்டுக்கள்: அஜித் ரசிகர்கள் குஷி!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்தது

தல வாங்கிய பழைய ராஜ்தூத் பைக்… வைரலாகும் புகைப்படம்!

கேப்டன் கிங் தோனி ஒரு பைக் பிரியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ஒன்லைன் கதை இதுதான்!

விஷால் நடித்த 'எனிமி' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த திரைப்படம் வசூல் அளவில் நல்ல வெற்றி பெற்றது என்பதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஐபிஎல் 2022: எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்தனர்? எத்தனை கோடி?

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது