கோமா நிலைக்கு சென்ற 'வாணி ராணி' சீரியல் நடிகர்: அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

ராதிகாவின் ’வாணி ராணி’ என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற உள்ளதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராதிகா நடித்த பிரபலமான தொலைக்காட்சி தொடர் ’வாணி ராணி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரில் ராதிகாவுக்கு கணவராக நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் சிவாஜி கணேசன் நடித்த ’படிக்காத பண்ணையார்’ கமல்ஹாசன் நடித்த ’அந்த ஒரு நிமிடம்’ மணிரத்தினம் இயக்கிய ’பகல் நிலவு’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் வேணு அரவிந்த் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து நடிகர் வேணு அரவிந்த் விரைவில் குணமாக வேண்டும் என்று சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More News

பிரபல தமிழ் நடிகர் தவறி விழுந்து காயம்: மருத்துவமனையில் அனுமதி

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்து காயம் அடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடலூரில் அதிமுக நடத்திய 'வட்ட போராட்டம்'....! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்ஸ்....!

சமூக இடைவெளியை தவறாக புரிந்துகொண்ட அதிமுக-வினர் நடத்திய வட்ட போராட்டம், நகைச்சுவை உணர்வை உண்டாக்கியுள்ளது.

சாட்டை துரைமுருகனை பழி வாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது.....! சீமான் காட்டம்....!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகனை வெளிவராதவாறு சிறைப்படுத்துகிறது

பதக்கம் வென்றால் இந்தியர், இல்லையென்றால் சிங்கியா? நடிகர் மனைவியின் சர்ச்சை கருத்து!

பதக்கம் வென்றால் மட்டும் எங்களை இந்தியர் என்று அழைப்பார்கள், மற்ற நேரங்களில் சிங்கி உள்பட பல பெயர்களில் எங்களை இழிவாக அழைக்கின்றார்கள் என பிரபல நடிகர் ஒருவரின் மனைவி

மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி: கமல்ஹாசன் பேட்டி

என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி என கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்