தற்கொலை செய்து கொள்ள தயார்! 'வாணி ராணி' நடிகை சபிதா சபதம்

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 'வாணி ராணி' தொடரில் நடித்த நடிகை சபீதா, அந்த தொடரின் மேலாளருடன் நடுரோட்டில் சண்டை போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் நடிகை சபீதா, மேலாளருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக பல இணையதளங்களும், சமூக இணையதளங்களும் செய்தி வெளியிட்டன.


இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே நடிகை சபீதா விளக்கம் அளித்திருந்தார். அந்த மேலாளர் தனது அப்பா வயது உள்ளவர் என்றும், அவரிடம் தான் கொடுத்த கடனை திரும்பி கேட்கவே அவருடைய வீட்டிற்கு சென்றதாகவும், அப்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும், அதை தவிர அவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும் வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இதே விஷயம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், 'அன்று நடைபெற்ற சம்பவத்தில் இருந்தது நான் தான். அதை மறுக்க வில்லை. ஆனால் எங்களுக்குள் எந்த தகாத உறவும் இல்லை. ஒரே ஒரு நாள் டி,.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பொய்யான செய்தியை பரப்பி என் வாழ்க்கையையே ஊடகங்கள் சிதைத்துவிட்டன. உங்களுக்கு ஒரு வெறும் செய்தியாக வெளிவரும் ஒரு பேப்பர். ஆனால் எனக்கு அது வாழ்நாள் கறை.

இந்த சம்பவத்திற்கு பின்னர் எந்த ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்தாலும் தற்கொலை செய்திருப்பார். ஆனால் எனக்கு தற்கொலையில் நம்பிக்கை இல்லை. அதுமட்டுமின்றி நான் என் அம்மாவை காப்பாற்றியாக வேண்டும். நான் தற்கொலை செய்துவிட்டால் அவர் அனாதையாகிவிடுவார். இருப்பினும் இரண்டு நாட்கள் அவருடன் நான் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை யாராவது வெளியிட்டால் நான் தற்கொலை செய்ய தயாராக இருக்கின்றேன்' என்று அந்த வீடியோ நடிகை சபீதா ஆவேசமாக கூறியுள்ளார்.

More News

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் 'தெறி' நடிகை

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டதை நெருங்கிவிட்டது. இந்த நிலையிலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற சஸ்பென்ஸை கவுதம் மேனன் வெளியிடவில்லை...

கமல்ஹாசனின் தமிழ் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார்?

உலக நாயகன் கமல்ஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்தை நடத்தவுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் கலந்து கொள்ள இருக்கும் விஐபிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

விஷால் அதிரடி முடிவால் அஜித்-விஜய் படங்களுக்கு சிக்கல்?

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய நடிகர் விஷால், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின்படி தயாரிப்பாளர்களின் முன்னேற்றத்திற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

விவேகம் படத்தின் வியக்க வைக்கும் வியாபாரம் ஆரம்பம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

'பாகுபலி 2' படத்தில் தமிழின விரோதி: பிரபல இசையமைப்பாளர் கருத்து

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்து வருகிறது.