வாணி போஜனின் அடுத்த படம்: டைட்டில் மற்றும் கதை குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,August 22 2020]

’தெய்வமகள்’ உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை வாணி போஜன், ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ’தாழ் திறவா’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பரணி சேகரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இது குறித்து அவர் கூறியபோது ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகிய இருவரும் இந்த படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக நடிக்கின்றனர். இந்த படம் பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள ஒரு பிரச்சனையை தீர்த்து வைப்பதே கதை என்றும் வழக்கமான திரில்லர் படம் போல் இருக்காமல் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் .

மேலும் வாணிபோஜன் கேரக்டர் மிகவும் வித்தியாசமானது என்றும் அவரது கேரக்டரை சுற்றியே இந்த படத்தின் முழு கதையும் அமைந்துள்ளது என்றும் கூறினார். லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவை மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை வாணி போஜன் கூறியபோது ’எனக்கு இந்த படத்தின் கேரக்டரை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இயக்குநர் சுரேஷ் மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கறிக்குழம்பு மாதிரி ஜம்முன்னு இருக்கு உங்க கசாயம்: சென்னை சித்தவைத்தியருக்கு பாராட்டு தெரிவித்த சூரி

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலகமே கொரோனா நோயாளிகளை காப்பாற்ற திணறி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வீரபாபு

'ரிகவர்' ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கும் இருக்கு: விஜய்சேதுபதி

தனக்குத்தானே யாருடைய உதவியுமின்றி 'ரிகவர்' ஆகும் தன்மை பூமியைப் போலவே மனிதனுக்கும் இருப்பதாக நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மிக உயரிய விருது அறிவிப்பு!

தமிழக விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது 

திரைப்படமாகிறது கோழிக்கோடு விமான விபத்து சம்பவம்: இயக்குனர் யார் தெரியுமா?

பரபரப்பான ஒரு உண்மை சம்பவம் நடந்தால் அதனை உடனே திரையுலகினர் திரைப்படமாக எடுப்பது கடந்த பல வருடங்களாக வழக்கமாக இருந்து வருகிறது

இன்றைய எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்