வடபழனி காவல்நிலைய போலீஸ் விசாரணையில் வனிதா!

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், வனிதா விஜயகுமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூரியா தேவி என்ற பெண் மீது வனிதா விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

அதுமட்டுமின்றி சூரியா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் தன்னுடைய வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் மீது அவதூறான பழியை சுமத்தி வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

இதனை அடுத்து தன்னை கஞ்சா வியாபாரி என்று கூறி தனது மனதை புண்படுத்திய வனிதா விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரியா தேவியும் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இரு தரப்பினர் கொடுத்த புகார் குறித்து வடபழனி போலீசார் இன்று விசாரணை செய்கின்றனர். இதனை அடுத்து வனிதா விஜயகுமார் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் இன்று வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர் என்றும், அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

More News

கொரோனாவை கட்டுப்படுத்த இதைக் குடிங்க… ஆயுஷ் அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொது மக்களுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ஊரடங்கு நேரத்திலும் முதலீட்டில் கலக்கும் தமிழக அரசு!!! தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை!!!

கொரோனா தாக்கத்தால் இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன

பிரதமர் மோடியை அடுத்து திடீரென லடாக் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

கடந்த வாரம் பிரதமர் மோடி லடாக் சென்று ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார் என்பதும், அப்போது அவர் ராணுவ வீரர்களுக்கு ஒரு திருக்குறளை கூறி ராணுவ வீரர்கள் அனைவரும்

சிட்டுக்குருவிக்காக பைக்கை விட்டுக்கொடுத்த பெண்: நவீன பாரி வள்ளல் என பாராட்டு

பாரி வள்ளல் என்ற மன்னன் முல்லைக் கொடி ஒன்று படர்வதற்கு கொழு கொம்பின்றி இன்றி தவித்த நிலையில் தன்னுடைய தேரை தந்த வள்ளல் தன்மை குறித்து சங்கத்தமிழில் கூறப்பட்டுள்ளது

சமந்தாவை ஓவர்டேக் செய்த பூஜா ஹெக்டே: பனிப்போர் தொடர்வதால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்தது என்பது தெரிந்ததே