போலீசார் முன் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை: வனிதா-சூர்யாதேவி சமாதானமா?

வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூரியா தேவி மீது வனிதாவும், வனிதா தன்னை கஞ்சா வியாபாரி என்றும் தனக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக அவதூறாக கூறியதாக வனிதா விஜயகுமார் மீது சூரியா தேவியும் மாறி மாறி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து வனிதா மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் மாலை காவல் நிலையத்துக்கு வரவழைத்த சென்னை வடபழனி காவல் நிலைய அதிகாரிகள், இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த இந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வனிதா, தான் இந்த விஷயத்தை சமரசமாக முடித்து கொள்ளலாம் என்று முடிவு செய்ததாகவும், ஆனால் போலீசார் எவ்வளவோ அறிவுறுத்தியும் மன்னிப்பு கேட்க சூரியா தேவி தயாராக இல்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஆகாததால் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் மோதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பல வருடங்களுக்குப்பின்பு நாடு திரும்ப காத்திருக்கும் பெண்: கைது செய்ய முயற்சிக்கும் இங்கிலாந்து அரசு!!! பரபரப்பு சம்பவம்!!!

இங்கிலாந்தின் குடியுரிமை பெற்ற ஷமிமா பேகம் (20) என்ற பெண் மாணவியாக இருக்கும்போது இங்கிலாந்தில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டதாகக் கூறப்படுகிறது

பார்வையற்ற முதியவருக்கு உதவிய பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!

கேரளாவில் பார்வையற்ற முதியவர் ஒருவரை பேருந்தில் ஏற்றிவிட பெண் ஒருவர் அங்குமிங்கும் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது குறித்த செய்தியை பார்த்தோம்.

ஒரே டுவிட்டில் மூன்று பிரச்சனைகளுக்கும் கண்டனம் தெரிவித்த வைரமுத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனையையும் மீறி மூன்று பிரச்சனைகள் ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகி வருகின்றன. ஒன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள்

நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த திடீரென விழுந்த பல்: சமாளித்த தொகுப்பாளினி

நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளரின் பாதிக்கப்பட்ட பல் ஒன்று திடீரென்று உடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்ச்சி போஸ் கொடுத்து தத்துவமழை பொழிந்த அமலாபால்!

கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்களையும்