அம்மா.. நான் உனக்கு 10000% ஆதரவாக இருக்கிறேன்: வனிதா மகளின் நெகழ்ச்சி பதிவு 

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை வரும் 27ஆம் தேதி செய்ய இருப்பதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இரண்டு முறை திருமணமாகி விவகாரத்து பெற்ற வனிதா எடுத்துள்ள இந்த முடிவுக்கு பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தாலும் ஒருசிலர் சமூக வலைதளங்களில் ஒருசில சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் வனிதாவின் மகள் ஜோவிகா தனது தாயாரின் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: அம்மா ஐ லவ் யூ. நான் உனக்கு 10000 சதவீதம் ஆதரவாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. உன்னை நான் நன்கு அறிவேன். நீ ஒரு கடின உழைப்பாளி. நேர்மையானவர். அருமையான உற்சாகப்படுத்த கூடியவள். அன்பு தருபவள். நான் எப்போதும் இதை மறுக்க மாட்டேன். மற்ற எல்லோரையும் போல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உனக்கு தகுதி இருக்கிறது. எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோரும் மேஜிக்கை நம்புவதில்லை. அதே போல் எல்லோரும் காதலை நம்புவதில்லை. ஆனால் நீ நம்புவாய். எனவேதான் அதன் பலன் உனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. என்று பதிவு செய்துள்ளார்.

வனிதா மகள் ஜோவிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 

View this post on Instagram

I'm counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Jun 17, 2020 at 11:41am PDT

More News

தமிழ் திரைப்பட காமெடி நடிகருக்கு திருமணம்: அமெரிக்க பெண்ணை மணக்கிறார்

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஒருவர் அமெரிக்காவில் படித்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

56 வயதிலும் கடுமையான உடற்பயிற்சியை செய்யும் தமிழ் நடிகை

56 வயது தமிழ் நடிகை ஒருவரின் கடுமையான உடற்பயிற்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

WHO: எப்படியும் இந்த ஆண்டு கிடைத்துவிடும்... நெஞ்சில் பாலை வார்க்கும் புதிய அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலகில் அனைத்து நாடுகளும் திண்டாடி வருகின்றன.

சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்குமா? முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதை அடுத்து முழு ஊரடங்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் முதல்வர் பழனிசாமி

கொரோனாவுக்கு சென்னையில் 22 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா