பழ வியாபாரிகளின் வண்டியை தள்ளிவிட்ட கமிஷனர்: சிலமணி நேரத்தில் நடந்த திருப்பம்!

  • IndiaGlitz, [Wednesday,May 13 2020]

கொரோனா அச்சம் காரணமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் பல்வேறு தளர்வுகள் அரசால் விதிக்கப்பட்டதால் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வாணியம்பாடியில் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் கடுமையாக நடந்துகொண்ட நிகழ்வுகள் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கின்றன

வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் தள்ளுவண்டி வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை தூக்கி எறிந்தும், தள்ளுவண்டியை கவிழ்த்தும் செய்த செயல்களின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிளாட்பாரம் மற்றும் சிறிய கடைகளில் செய்யும் இந்த அராஜகத்தை சூப்பர் மார்க்கெட்டில் செய்ய முடியுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். வியாபாரிகள் செய்தது தவறாக இருந்தாலும் அவர்களிடம் நயமாக எடுத்து சொல்லியிருக்கலாம் என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்தனர். மேலும் வாணியம்பாடி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து திடீர் திருப்பமாக சிறிது நேரத்துக்கு முன்னர் தான் செய்த தவறை உணர்ந்து வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி கமிஷனர், தான் கீழே தள்ளிவிட்ட பழங்களுக்கான பணத்தையும் அவர் வியாபாரிகளிடம் வழங்கியுள்ளார். மேலும் இனிமேல் நகராட்சி விதிகளை முறையாக கடைபிடித்து வியாபாரம் செய்யுமாறும் அவர் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்

More News

கவினை மறைமுகமாக அட்டாக் செய்தாரா லாஸ்லியா? 

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

கொரோனா போன்று உருளைக் கிழங்கை தாக்கும் “லேட் பிலைட்” நோய்த்தொற்று!!! மீண்டு வந்தது எப்படி???

உலகமே கொரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கி தவிப்பது மாதிரி ஒரு காலத்தில் “லேட் பிலைட்” (Late Blight)  என்ற நோய்த்தொற்று உருளைக் கிழங்கு உற்பத்தியை முற்றிலும் நாசப் படுத்தியிருக்கிறது

பிரபல தமிழ் நடிகர் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்: பெரும் பரபரப்பு

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராதாரவி வீட்டில் தனிப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஊரடங்கு நேரத்தில், கொட்டும் மழையில், நடுரோட்டில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி', தளபதி விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' விக்ரம் நடித்த 'கந்தசாமி' உள்பட பல தமிழ் படங்களிலும்

ஊழியருக்கு கொரோனா: சென்னை அண்ணாசாலை பிரியாணி கடையை மூடிய போலீசார்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அந்த கடையை போலீசார் மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது