தூக்கில் போடுங்கள்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 கயவர்கள் குறித்து பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டிகள் உள்பட மொத்தம் 22 பேர் 12 வயது வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சுமார் 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த மிருகத்தனமான செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது இந்த 22 மிருக மனிதர்களில் 18 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒருசிறுமியை இத்தனை மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரபல அரசியல்வாதிகள் உள்பட அனைவரும் கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது கடுமையான ஆத்திரத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளிப்படுத்தியுள்ளார்

'இந்த செய்தியை கேட்டு என் வயிறு கலங்குகிறது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முடிவே கிடையாதா? பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மைனராக இருந்தாலும் மேஜராக இருந்தாலும் தூக்கில் போடுங்கள். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும். பல இளம் உயிர்கள் இதுபோன்ற அரக்கர்களால் பறிக்கப்படுகிறது. மாற்றத்திற்கான நேரம் இது' என்று கூறியுள்ளார்.

 

More News

சென்னையில் ஸ்ரீரெட்டி: கோலிவுட் பிரபல நடிகைகள் டார்கெட்டா?

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் என்ற புயல் ஓய்ந்தாலும் தற்போது அந்த புயல் கோலிவுட்டை தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் மையம் கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் வின்னர்

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் சூப்பர் சிங்கர் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார்.

திமுகவை ஏன் கலாய்க்கவில்லை: சி.எஸ்.அமுதன் விளக்கம்

சமீபத்தில் வெளியான 'தமிழ்ப்படம் 2' படத்தில் கிட்டத்தட்ட கலாய்க்கப்படாத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறலாம். ரஜினி, கமல் படங்கள் முதல் இனிமேல் வெளியாக போகும் 'சர்கார்' வரை கலாய்க்கப்பட்டிருந்தது.

ஓவியாவை அடுத்து பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளன்று முதல் பாகத்தில் கலந்து கொண்ட ஓவியா, பிக்பாஸ் வீட்டில் ஒருசில மணி நேரங்கள் இருந்து கலகலப்பூட்டினார்.

நயன்தாராவுக்காக பணம் வாங்காமல் பணி செய்த நான்கு பிரபலங்கள்

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.