ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? திருமணம் குறித்து வரலட்சுமி விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

நடிகை வரலட்சுமி திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் என்பது தெரிந்ததே. ஏற்கனவே விஷாலை வரலட்சுமி திருமணம் செய்யப் போவதாக கடந்த சில ஆண்டுகளாக வதந்திகள் கிளம்பி அதன்பின் விஷாலுக்கும் அனிஷா ரெட்டி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த உடன் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வரலட்சுமி, சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினர்களும் சம்மதம் தெரிவித்ததாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது

இது குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: என்னுடைய திருமண விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது என்பது தெரியவில்லை. அதே முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லோரும் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எனக்குத் திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி நின்று இதைப் பற்றி எழுதும் அனைத்து ஊடகங்களுக்கும் அறிவிப்பேன். எனக்குத் திருமணமும் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து வரலட்சுமியின் காதல் செய்தி, வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது

More News

போனிகபூர் வீட்டில் உள்ள நபருக்கு கொரொனா: அதிர்ச்சி தகவல்

https://www.indiaglitz.com/boney-kapoor-on-covid-19-coronavirus-valimai-producer-thala-ajith-tamil-news-260763

பிரதமர் மீது கல்லெறிந்தால் இதுதான் நடக்கும்: ஜோதிமணி எம்பிக்கு நடிகை எச்சரிக்கை

நேற்று தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தின் போது கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

கமல் கொடுத்த கிஃப்ட்: மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்க நடிகை

உலகநாயகன் என்ற பெயருக்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசனின் புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பது தெரிந்ததே. உலக சினிமா பிரபலங்கள் அனைவரும் கமல்ஹாசனையும் அவரது திறமையையும் அறிந்து வைத்துள்ளனர்.

ஓடிடியில் வெளியாகிறது அமிதாப்பச்சனின் அடுத்த படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்

லாக்டவுனுக்கு பின் காதலரை கைப்பிடிக்கின்றாரா வரலட்சுமி?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமியின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளி வந்து கொண்டே இருக்கும்.