பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இணைந்த வரலட்சுமி!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஆர் பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை வரலட்சுமி இயக்குனர் கோபிசந்த் இயக்கிய ’க்ராக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து இருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்திலும் வரலட்சுமி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்டிஆர் பாலகிருஷ்ணா படத்தில் வரலட்சுமி நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நடிகை வரலட்சுமி ஏற்கனவே தமிழில் ‘காட்டேறி, பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி: வைரல் புகைப்படம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை

தமிழ் திரைப்பட நடிகைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்: என்ன காரணம்?

விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' கருணாஸ் நடித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு நாக்பூர் உயர்நீதிமன்றம் ரூபாய் இரண்டு லட்சம் அபராதம்

5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய மருத்துவமனை… 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று ஒரு தனியார் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரம்யா பாண்டியனின் 'சூப்பர் பவர்' போட்டோஷூட்! வேற லெவலில் வைரல்!

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரம்யா பாண்டியன் என்பது தெரிந்ததே. இவர் 'ஜோக்கர்' மற்றும் 'ஆண்தேவதை' உள்ளிட்ட

கொரோனாவின் கொடூரம்....!பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்....!

தமிழகத்தில் சுமார் 1400 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவித்து வருகிறார்கள். இச்செய்தி காண்போர் நெஞ்சை கண்கலங்க வைத்துள்ளது.