'தல' பிறந்த நாள் டிபியை வெளியிட்ட வரலட்சுமி: குவியும் பாராட்டுக்கள்

கடந்த சில வருடங்களாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பிறந்த நாள் வரும்போது டிபி என்ற வாழ்த்து புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட தளபதி விஜய்யின் பிறந்தநாள் விழாவை அடுத்து ஒரே நேரத்தில் பல பிரபலங்கள் அவருடைய டிபி புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் பிறந்தநாள் வரும் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தல தோனியின் பிறந்தநாள் டிபியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

தல தோனி அவர்களின் பிறந்தநாள் டிபியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்குமே தெரியும் நான் தல தோனியின் தீவிர ரசிகர் என்று. 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தல தோனியை பார்க்க நாம் மிஸ் செய்து விட்டோம். ஆனால் கண்டிப்பாக அவர் தனது பரிவாரங்களுடன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தல தோனி அவர்களுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

சுற்றிலும் வானுயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே ஸ்டைலாக கையில் பேட் வைத்து நின்று கொண்டிருக்கும் தல தோனியின் பிறந்தநாள் டிபி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும், தோனியின் பிறந்தநாள் டிபியை வெளியிட்ட வரலட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,

More News

சிதம்பரம் ரகசியம் என்றால் என்ன??? வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் அரிய தகவல்கள்!!!

நம்முடைய தமிழர் பண்பாட்டில் ஒரு வழக்கம் உண்டு. எதை ஒளித்து வைத்தாலும் அதற்கு பெயர் சிதம்பர ரகசியம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த சிதம்பரத்தில்? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

கணவர் கொடுமையால் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்திய

கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: அட்டைப்பெட்டி படுக்கைகளால் நிரம்பி வழியும் இந்தியா!!!

இந்தியா உலகளவில் கொரோனா வரிச்சைப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து இருக்கிறது

1000க்கும் அதிகமான உயிரிழப்புகள்: 50 ஆயிரத்தை தாண்டிய சென்னை கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக 3000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மகனுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் பூச்சி மருந்தை குடித்த பெற்றோர்கள்

மகனுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும் அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது