'பீஸ்ட்' விமர்சனம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்து!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று காலை வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் வேண்டுமென்றே படு மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி விமர்சகர்களுக்கு தனது வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று ’பீஸ்ட்’ நாள். ’பீஸ்ட்’ திரைப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். விஜய், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். தளபதி விஜய்யின் எமோஷன் மிகவும் அருமையாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தை விமர்சனம் செய்யும் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த படத்தின் விமர்சனம் நல்லதோ, கெட்டதோ அதை உடனடியாக வெளியிட வேண்டாம். ரசிகர்களை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் படம் பார்த்து அனுமதித்து அவர்கள் மகிழ்ச்சி அடைய அனுமதியுங்கள். அதன்பிறகு விமர்சனம் வெளியிடலாம்’ என்று கூறியுள்ளார்.

More News

அமைச்சரானவுடன் நடிகை ரோஜாவின் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் நடிகை ரோஜா பதவியேற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு நடிகைகள் குஷ்பு, ராதிகா

பிரியாவிடை பெறுகிறேன்: படப்பிடிப்பு முடிந்ததை நெகிழ்ச்சியுடன் அறிவித்த சூரி!

நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் தான் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரசாந்த் உடன் லைலா: வைரல் வீடியோ

22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரசாந்த் உடன் நடித்த வீடியோவை நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

அமித்ஷாவின் 'இந்தி' பேச்சுக்கு 'பீஸ்ட்' பட வசனம் மூலம் பதிலடி தந்தாரா விஜய்?

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டுமென சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'பீஸ்ட்' படம் பார்த்த ரசிகர்களுக்கு பெட்ரோல் இலவசம்: ரசிகர்கள் அசத்தல்

 'பீஸ்ட்'  படம் பார்த்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.