close
Choose your channels

என்னால் விஜய் போல் இருக்க முடியாது: வரலட்சுமி

Saturday, June 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் விஜய்யின் 'சர்கார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்தும் விஜய் குறித்தும் ஒருசில விஷயங்களை பகிருந்து கொண்டார். அவர் கூறியதாவது:

விஜய்யிடம் எனக்கு உள்ள ஒரு ஆச்சரியம் அவர் நிஜத்தில் மிக அமைதியானவர். ஆனால் திரையில் எப்படி ஆக்ரோஷத்தை கொண்டு வருகிறார் என்பது தெரியவில்லை. என்னை பற்றி கேட்டால் நான் மிகவும் துறுதுறுப்பாகவும் லொட லொடவென்றும் பேசிக்கொண்டிருப்பேன். அதனால் என்னை பற்றி தெரிந்தவர்கள் நான் திரையிலும் சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்து ஆச்சரியபட மாட்டார்கள். என்னால் விஜய் போன்று அமைதியாக இருக்க சொன்னால் இருக்கவே முடியாது.

ஆனால் விஜய் திரையில் ஆர்ப்பாட்டமாகவும் நிஜத்தில் அமைதியாகவும் இருப்பது என்னை மட்டுமல்ல அவரை தெரிந்த அனைவருக்குமே ஆச்சரியம்தான் என்று கூறினார்.

மேலும் 'சர்கார்' படத்தில் விஜய்யுடன் தனக்கு 25 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், தற்போது நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இந்த படத்தில் இருவரும் இணைந்திருக்கும் காட்சிகள் முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.