close
Choose your channels

நீதியின் முன் அனைவரும் சமம்: திலீப் கைது குறித்து பிரபல தமிழ் நடிகை

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அடிப்படையான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சம்பவத்திற்கு மூளையாக இருந்தது திலீப்தான் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாள திரையுலகின் தாதாவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படும் திலீப் கைது நடவடிக்கை, சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு சான்று என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரைத்துறை பெண்களின் பாதுகாப்புக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை வரலட்சுமி இதுகுறித்து கருத்து கூறும்போது, ''இந்த விவகாரத்தில் உண்மையாகவே நடிகர் திலீப் தவறு செய்திருந்தால், கண்டிப்பாக அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். ஒரு நடிகை என்பதால்தான் இதில் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று சிலர் பேசுகிறார்கள். இந்தச் சம்பவம் , ஒரு சாதாரண குடிமகளுக்கு நடந்திருந்தாலும். காவல் துறையினர் கண்டிப்பாக துரித நடவடிக்கை எடுத்திருப்பார்கள். நீதியின் முன் அனைவரும் சமம். நீதி அனைவருக்கும் சமம்தான். நீதி நிலைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்று வரலட்சுமி கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.