close
Choose your channels

மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Thursday, August 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். நேற்று கூட 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருவாடனை தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் மற்றும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே இருபதுக்கும் மேலான தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற நிலையில் இன்று மேலும் ஒரு அதிமுக எம்.எல்.வுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

வாசுதேவ நல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோகரன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து அவர் தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் என தொடர்ச்சியாக முக்கிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.